விக்டோரியா ராணியை விட என் எருமைகள், அது போட்ட சாணி பேமஸாகி விட்டது.. உ.பி. அமைச்சர் கிண்டல்
Subscribe to Oneindia Tamil
கான்பூர்: என் எருமைமாடுகள் இங்கிலாந்து ராணி விக்டோரியாவை விட பிரபலமாகிவிட்டன என்று உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஆஸம் கான் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஆஸம் கானின் 7 எருமைமாடுகள் அவரது பண்ணை வீட்டில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருடுபோனது. எருமைமாடுகளை தேட உயர் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அவர்கள் மோய்ப்ப நாய்களுடன் எருமைமாடுகளை தேடி அலைந்து ஒருவகையாக கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் இது குறித்து ஆஸம் கான் கூறுகையில்,
டிவியை ஆன் செய்தாலே என் எருமைமாடுகளின் படங்களும், அவற்றின் சாணத்தை மக்கள் தங்கள் தலையில் வைத்து எடுத்துச் செல்வதும் தான் வருகிறது. என் எருமைகள் போன்று அனைவருக்கும் அதிர்ஷ்டம் அடிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். என் எருமைமாடுகள் இங்கிலாந்து ராணி விக்டோரியாவை விட பிரபலம் ஆகிவிட்டன என்றார்.












Click it and Unblock the Notifications