அவள் பெயர் ஜோதி சிங்... அவளைக் கொன்றவனை தீ வைத்து எரியுங்கள்- "நிர்ப்பயா"வின் தாய் கண்ணீர்!
டெல்லி: டெல்லியில் கொடூரமாக பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்ப்பயா என அழைக்கப்படும் ஜோதி சிங்கின் தாயார் சிறுவனான குற்றவாளியை தீ வைத்து எரிக்க வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் தாயார் மூன்று வருடங்களுக்கு பின்னர் தன்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்று அறிவித்து உள்ளார்.
இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சிறுவனை விடுவிக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.

கொடூர பலாத்காரம்:
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் தேதி இரவு, மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதன் 3 ஆவது ஆண்டு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

என் மகள் ஜோதி:
அஞ்சலி செலுத்திய பின்னர் மாணவியின் தாயார் ஆஷா தேவி பேசுகையில், "தன்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்றும், என்னுடைய மகளின் பெயரை கூறுவது எனக்கு வெட்கமானது கிடையாது" என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?:
டெல்லியில் நடந்த கூட்டத்தில் பேசிய ஆஷா தேவி, "என்னுடைய மகளின் பெயரை கூறுவதில் நான் வெட்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தங்களுடைய பெயரை மறைக்க கூடாது. குற்றவாளிகளே வெட்கப்பட வேண்டும், அவர்களுடைய பெயரை மறைக்க வேண்டும்.

இனி ஜோதி என்றே அழையுங்கள்:
என்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்று எல்லோரிடமும் தெரிவிக்க விரும்புகின்றேன். இன்றில் இருந்து என்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்று எல்லோரிடமும் கூறுவேன்" என்று கூறிஉள்ளார்.

தீ வைத்துக் கொல்லுங்கள்:
இவ்வழக்கில் விடுதலை செய்யப்பட உள்ள சிறுவன் குறுத்து ஆஷா தேவி பேசுகையில், "எனது மகள் இறந்து மூன்றாவது ஆண்டு நாள் அனுசரிக்கப்படும் நிலையில், அவனை தீ வைத்து எரிக்க வேண்டும்" என்று கூறிஉள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications