நாடாளுமன்றத்தில் நடப்பதை பார்க்கும்போது இதயத்தில் ரத்தம் கொட்டுகிறது: மன்மோகன்சிங்
டெல்லி: நாடாளுமன்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது இதயத்தில் ரத்தம் கொட்டுகிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் தெலுங்கானா விவகாரத்தால் லோக்சபாவும் ராஜ்யசபாவும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று லோக்சபாவில் கடும் அமளிக்கு இடையே ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் ரயில்வே பட்ஜெட்டின் பிரதிகளை கிழித்து எறிந்தனர். அவையும் ஒத்திவைக்கப்பட்டது. சீமாந்திராவின் 4 மத்திய அமைச்சர்களும் இந்த அமளியில் இணைந்து கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்; நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்ன என்பதை பார்க்கும்போது எனது இதயத்தில் ரத்தம் கொட்டுகிறது... இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்றார்.












Click it and Unblock the Notifications