Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிளகுபொடி வீசிய காங். எம்.பி.க்கும் தீவிரவாதிக்கும் வித்தியாசம் இல்லை: மத்திய அமைச்சர் கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

Nagender blasts rajagopal, urges centre to act tough
டெல்லி: நாடாளுமன்றத்தில் மிளகுபொடி தூவிய எம்.பி ராஜகோபால் தீவிரவாதிக்கு சமமானவர் என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சர் தனம் நாகேந்தர் சாடியுள்ளார்.

தெலுங்கானா தனி மாநில மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது ஆந்திர எம்.பி.க்கள் சபையின் மையத்துக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். அப்போது விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் தான் கொண்டு வந்திருந்த மிளகு பொடியை எடுத்து ‘ஸ்பிரே' செய்தார்.

இதனால் சபாநாயகர் மற்றும் பல எம்.பி.க்கள் கண் எரிச்சல், சுவாச கோளாறினால் அவதிப்பட்டனர். இதையடுத்து ராஜகோபால் உள்பட 18 எம்.பி.க்கள் அவையில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவத்துக்கு சபாநாயகர் மீராகுமார் உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ராஜகோபால் தீவிரவாதிக்கு சமமானவர் என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சர் தனம் நாகேந்தர் வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிளகு பொடி வீசிய எல்.ராஜகோபாலுக்கும், தீவிரவாதிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே தாக்குதல் நடத்தினார்கள். இவர் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே தாக்குதல் நடத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் பெற்று வெற்றி பெற்ற அவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையே அவமானப்படுத்திவிட்டனர். அவர்களின் நடவடிக்கை கோமாளித்தனமானது.

ராஜகோபால் நாட்டுக்கே அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தி விட்டார். எனவே அவரையும் சீமாந்திரா பகுதி எம்.பி.ககளையும் நாடாளுமன்றத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+