நாரதர் அந்த காலத்து கூகுள்.. அனைத்தையும் அறிந்தவர்... சொல்வது குஜராத் முதல்வர் விஜய்ரூபானி
நாரதர் அந்த காலத்து கூகுள் என்கிறார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி.
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: நாரதர் அந்த காலத்து கூகுள்; உலகில் நடக்கின்ற அனைத்தையும் அறிந்தவர் என குஜராத் முதல்வர் விஜய்ரூபானி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
அகமதாபாத்தில் விஸ்வ சம்வத் கேந்திராவில் தேவரிஷி நாரத் ஜெயந்தி நடைபெற்றது. இதில் விஜய்ரூபானி பேசியதாவது:

வேதங்களில் நாரதர் பற்றி எழுதப்பட்டுள்ளது. நாரதரானவர் இன்றைய கூகுளைப் போல. ஏனெனில் உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நாரதருக்கு தெரியும்.
நாரதர் அனைத்து தகவல்களையும் அறிந்து ஒட்டுமொத்த இந்த உலகத்துக்கே அதை தெரிவித்தவர்.
இவ்வாறு விஜய ரூபானி கூறினார்.
திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், மகாபாரத காலத்திலேயே இண்டர்நெட் இருந்தது என கூறி சர்ச்சையில் சிக்கினார். இப்போது கற்பனை பாத்திரமான நாரதரை கூகுளுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி.












Click it and Unblock the Notifications