அன்னா முதுகுல குத்திட்டீங்களே கேஜ்ரிவால்.. மோடி தாக்கு
டெல்லி: அன்னா ஹஸேராவின் முதுகில் குத்தி விட்டார் அரவிந்த் கேஜ்ரிவால் என்று கூறியுள்ளார் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.
டெல்லியில் சீமாபுரியில் நடந்த பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
சில புதியவர்கள் தேர்தல் களத்தில் புகுந்துள்ளனர். அவர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஜேபி இயக்கத்திற்குப் பின்னர் ஊழலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் அன்னா ஹஸாரே. மக்கள் ஊழல்வாதிகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம்.

ஆனால் சிலர் அன்னாவின் புனிதமான இயக்கத்தை தங்களது அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர். அன்னாவின் முதுகில் அவர்கள் குத்தி வருகின்றனர். மேலும் அன்னாவின் இயக்கத்தை தங்களது சுயநலத்துக்காக அவர்கள் பாதியிலேயே முடித்து விட்டனர்.
காங்கிரஸ் மக்களிடம் ஒரு கையைக் காட்டுகிறது. ஆனால் இரு கைகளால் நாட்டை சூறையாடி வருகிறது. ஆனால் புதியவர்களுக்கோ இரு கைகளும் கூட போதாது போலத் தெரிகிறது.
துடைப்பத்தைக் கூட அவர்கள் விட மாட்டார்கள் போல. அதையும் கூட சுருட்டிக் கொள்கிறார்கள் என்றார் மோடி.
துடைப்பம்தான், அரவிந்த் கேஜ்ரிவால் கட்சியின் தேர்தல் சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications