செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடு தலைமையில் முதல்வர்கள் குழு அமைக்கிறது மத்திய அரசு
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து ஆலோசனை தருவதற்கு முதல்வர்கள் குழுவை அமைக்கிறது மத்திய அரசு
டெல்லி: செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 5 முதல்வர்கள் கொண்ட குழுமை மத்திய அரசு அமைக்கிறது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவிடம் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நேற்று ஆலோசனை நடத்தினார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணப் புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியுள்ளது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து 3 வாரங்கள் ஆனபோதும் நிலைமை சரியாகவில்லை. தொடர்ந்து ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டே இருக்கின்றன. திறந்திருக்கும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்கள் முன்பும் மக்கள் நீண்ட வரிசையில் நாள்தோறும் காத்திருக்கும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.
இப் பிரச்சனையை எதிர்கொள்ள மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்க 5 மாநில முதல்வர்கள் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசித்தார்.
இந்த முதல்வர்கள் குழுவுக்கு சந்திரபாபு நாயுடுவை தலைமை ஏற்குமாறும் ஜேட்லி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications