காங்கிரஸுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை... இதில் அரசை எப்படி நம்பும்- மோடி கேள்வி
காங்கிரஸுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை இதில் அரசை எப்படி நம்பும் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
டெல்லி: காங்கிரஸுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை. எனவேதான் அரசு மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். தெலுங்கு தேச கட்சியின் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனினும் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டார் மோடி.
அப்போது அவர் கூறுகையில் எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களை குழப்புகிறார்கள். 15 கோடி மக்களுக்கு மண் பரிசோதனை அட்டை தரப்பட்டுள்ளது.

இந்தியாவில்
கடந்த 2 வருடங்களில் 5 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் கொண்டு வரப்பட்டுள்ளனர். யூரியா பற்றாக்குறை இப்போது இந்தியாவில் கிடையாது. அரசு ஏழைகளுக்காக உழைத்து வருகிறது.

மக்கள் மீது ஆட்சியாளர்கள்
13 கோடி இளைஞர்களுக்கு தொழில் துவங்க கடன் வழங்கியுள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் ஏழைகளுக்கும் சிறப்பான சிகிச்சை கிடைக்கிறது. விவசாயிகள் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம். நாட்டில் வளர்ச்சியில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் மீது ஆட்சியாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

போர் தொடரும்
தவறான வழிக்கு செல்லவிருந்த ரூ.90 ஆயிரம் கோடி அரசு பணத்தை தடுத்துள்ளோம். 4500 பினாமி சொத்துக்களை அரசு கைப்பற்றியுள்ளது. கருப்பு பணத்திற்கு எதிரான போர் தொடரும்.

எப்படி நம்புவர்
இன்னும் கூட அரசு மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லையாம். காங்கிரசுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை, எனவேதான் அரசையும் நம்பவில்லை. தன் மீதே தங்களுக்கு நம்பிக்கையில்லாதவர்கள் எப்படி அரசை நம்புவர் என்று மோடி கேள்வி எழுப்பினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications