'பாகுபலி' ஹீரோ பிரபாசை நேரில் அழைத்து வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி: வசூல் சாதனை படைத்துள்ள பாகுபலி திரைப்படத்தின் ஹீரோ பிரபாஸ் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ரிலீசாகி இரு வாரங்களில் 350 கோடிக்கு மேல் வசூலித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் ஹீரோ பாத்திரத்தை ஏற்று நடித்தவர் பிரபாஸ்.
Met 'Baahubali' Prabhas today. pic.twitter.com/Qs44yENsOL
— Narendra Modi (@narendramodi) July 26, 2015 இந்நிலையில், பிரபாசை பிரதமர் நரேந்திரமோடி அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் தளத்தில் பிரதமர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். 'பாகுபலி' பிரபாசை சந்தித்தேன் என்று மட்டும் அதில் கூறியுள்ளார். படத்தையும் வெளியிட்டு்ள்ளார்.
அந்த படத்தில் தெலுங்கு நடிகரும், பிரபாசின் பெரியப்பாவுமான, கிருஷ்ணம் ராஜுவும் உடனுள்ளார். பிரபாசும் தனது டிவிட்டர் கணக்கில் இப்படத்தை ஷேர் செய்துள்ளார். நேற்று இந்த சந்திப்பு நடந்துள்ளது.
'ஒய் திஸ் கொலவெறி' என்ற பாடல் அகில இந்தியாவிலும் பேமஸ் ஆனபோது, அந்த பாடல் இடம் பெற்ற '3' திரைப்படத்தின் ஹீரோ தனுஷை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அழைத்து விருந்து கொடுத்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications