டெல்லி ஏர்போர்ட்டியில் உயிர் தப்பிய ராகுல் காந்தி
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் நேர இருந்த விமான விபத்தில் இருந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மயிரிழையில் உயிர் தப்பினார்.
ரேபரேலி சென்றுவிட்டு ராகுல் காந்தி புதுடெல்லிக்கு விமானத்தில் திரும்பினர். அவர் சென்ற விமானம் தரையிறங்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விமானம் தரையிறங்க தயாரானது. அதே நேரத்தில் அந்த ஓடு தளத்தில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நின்றுள்ளது.
ராணுவத்திற்கு சொந்தமான விமானமும் ஓடு தளத்தில் மெதுவாக நகர்ந்த போது ராகுல் வந்த விமானம் தரையை நெருங்கியது. பின்னர், விமானம் இருப்பது குறித்து தகவல் அறிந்ததும் கடைசி நேரத்தில் விமானிகளின் சமார்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்து தவிர்க்கப்பட்டதால் ராகுல் காந்தி உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.