காதலிக்க மறுத்ததால் நேர்ந்த கொடூரம்... மே.வங்கத்தில் தேசிய வாலிபால் வீராங்கனை குத்திக் கொலை !
கொல்கத்தா: காதலிக்க மறுப்பு தெரிவித்த காரணத்தால் மேற்கு வங்கத்தில் 15 வயது தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை ஒருவர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் பர்கான மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கீதா எய்ச் என்ற டீனா. இவர் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வாலிபால் வீராங்கனையாக இருந்து வந்தார். 9 ம் வகுப்பு படிக்கும் இவர் சிறு வயது முதல் கைப்பந்து விளையாட்டில் ஏற்பட்ட ஈடுபாட்டில் மிக துடிப்பான வீராங்கனையாக திகழ்ந்தார்.

ஏராளமான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கங்களை குவித்திருக்கிறார். அதன் மூலம் தேசிய அளவிலான 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் விளையாடும் தகுதியையும் பெற்றிருந்தார். இந்நிலையில் அங்குள்ள பயிற்சி முகாமில் வெள்ளிக்கிழமையன்று சக வீராங்கனைகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார் சங்கீதா.
அப்போது அங்கு வந்த சக கைப்பந்து ராஜா என்பவர் சங்கீதாவை சந்தித்து தனது காதலை தெரிவித்துள்ளார். அதனை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை பின்தொடர்ந்து சென்ற சுரதா சிங் ஆத்திரத்தில் சங்கீதாவை கத்தியால் இடைவிடாது குத்தியிருக்கிறார். இந்த சம்பவத்தில் கைப்பந்து வீராங்கனை உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை தொடர்ந்து காவல்நிலையத்தில் இன்று ராஜா சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் சங்கீதாவை காதலித்ததாகவும். சங்கீதா அதை ஏற்க மறுத்ததாகவும் கூறி உள்ளார். சங்கீதாவின் நடவடிக்கையால் ஆத்திரமைடைந்து அவரை கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் விளையாட்டுத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications