Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நாட்டி பாய்" இன்று நல்ல பையனா நடந்துக்கிட்டான்.. கமெண்ட் அடித்த INSAT 3DS இயக்குநர்! ஒரே சிரிப்பு!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: ஜிஎஸ்எல்வி 14 ராக்கெட் இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய நிலையில் "நாட்டி பாய்" நல்ல பணிவான ஒழுக்கமான பையனாக நடந்து கொண்டுள்ளது என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் இன்சாட் 3டிஎஸ் திட்ட இயக்குநர் டாமி ஜோசப்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக 'இன்சாட் - 3டிஎஸ்' என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது. இதனை ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-14 ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்ட் டவுன் நேற்று (16-02-24) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது.

இன்சாட் 3DS வெற்றிகரமா வேலையை ஆரம்பிச்சிருச்சு.. விஞ்ஞானிகளை பாராட்டிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்! Read more at: https://tamil.oneindia.com/news/chennai/isro-chairman-somnath-after-insat-3ds-satellites-successful-launch-583855.html

விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது இன்சாட் 3டிஎஸ்: இந்த ராக்கெட் இன்று மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அதிநவீன இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எப் 14 ராக்கெட் இன்று (17-02-24) மாலை 5:35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டது.

2,274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன்மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம்.

இந்த ஜி.எஸ்.எல்.வி 14 சரியான திசையில் பயணித்து செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது. இதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த செயற்கை கோள் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

நாட்டி பாய்.. நல்ல பையனாக நடந்து கொண்டுள்ளான்: அதைத்தொடர்ந்து பேசிய இன்சாட் 3டிஎஸ் திட்ட இயக்குநர் டாமி ஜோசப், "கிரையோஜெனிக் என்ஜினோடு இன்று விண்ணில் செலுத்தப்பட்ட ஜி எஸ் எல் வி ராக்கெட் ஒரு காலத்தில் நாட்டி பாய் என அழைக்கப்பட்டது. ஆனால் இன்று "நாட்டி பாய்" நல்ல பணிவான ஒழுக்கமான பையனாக நடந்து கொண்டுள்ளது.

செயற்கைக்கோள் திட்டமிட்டப்படி அதன் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஜி எஸ் எல் வி திட்டத்தின் 16வது மிஷன். கடந்த முறையை விட இந்த 50 கிலோ அதிகமான பே லோட் உடன் இந்த ராக்கெட் செலுத்தப்பட்டது. இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவிபுரிந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்தார்.

நாட்டி பாய் - செல்லப் பெயர்: ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டி பாய் என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள். இதற்கு காரணம் இந்த ராக்கெட் கடந்த காலங்களில் இதுவரை நிறைய திட்டங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் 40 சதவீதம் தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது ஜி.எஸ்.எல்.வியின் ஃபெயிலியர் ரேட் 40 சதவீதம்.

இன்சாட் 3டிஎஸ் -க்கு முன்னதாக ஏற்கெனவே 15 முறை விண்வெளி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட போதிலும் 6 மிஷன்களின் போது இந்த ராக்கெட் பிரச்சனைகளை சந்தித்தது. கடந்த ஆண்டு மே மாதம் கடைசியாக இந்த ராக்கெட் விண்வெளி திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட போது அது வெற்றியடைந்தாலும் அதன் பிறகு விண்ணுக்கு சென்ற போது தோல்வியில் முடிந்தது.

இப்படியாக ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் பலமுறை சொதப்பி, என்ன நடக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகளை அச்சத்திலேயே வைத்திருப்பதால் இதனை நாட்டி பாய் என்று செல்லமாக அழைக்கிறார்கள். இந்த நாட்டி பாய் இன்று நல்ல முறையில் நடந்து கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார் இன்சாட் 3டிஎஸ் திட்ட இயக்குநர் டாமி ஜோசப்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+