20 கொலை உட்பட 100 வழக்குகள்.. போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட கேங்ஸ்டர் நயீமின் பகீர் பின்னணி
ஹைதராபாத்: ஹைதராபாத்திலிருந்து சுமார் 40 கிமீ தொலைவிலுள்ள சாத்நகரில் பிரபல கேங்ஸ்டர் நயீம் இன்று போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சுட்டு கொல்லப்பட்டார். இவர் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை பல காலமாக அச்சுறுத்தி வந்த மிகப்பெரிய ரவுடியாகும்.
தற்போதைய தெலுங்கானா மாநிலத்தின், நலகோண்டா மாவட்டம் புவன்கிரியை சேர்ந்தவர் நயீம். 15 வருடங்கள் முன்பு, ஆந்திராவில் நக்சலைட் தீவிரவாதம் கொடிகட்டி பறந்த காலகட்டத்தில், நயீம், நக்சலைட் தீவிரவாதியாகினார்.

அந்த அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளை தொடர்ந்து, நக்சலைட் இயக்கத்தில் நீடிக்க முடியாமல் தப்பியோடி, கேங்ஸ்டராக மாறினார் நயீம்.

கொலை, கொள்ளை என பல்வேறு குற்றங்களை செய்து வந்தார் நயீம். ஐபிஎஸ் அதிகாரி வையாஸ், முன்னாள் நக்சலைட்டுகள் சாம்பசிவுடு, ராமுலு ஆகியோரை கொலை செய்ததாக நயீம் மீது வழக்கு உள்ளது. சுமார் 100 வழக்குகள் இவர் மீது இருந்தன, அதில் 20 கொலை வழக்குகள் என்பதில் இருந்தே நயீமின் கொடூரத்துவத்தை புரிந்து கொள்ள முடியும். நாட்டை உலுக்கிய சொரபுதீன் என்கவுண்டர் வழக்கிலும் இவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 12 வருடமாக ஆந்திரா மற்றும் சமீபத்தில் உருவான தெலுங்கானா மாநிலங்களை அச்சுறுத்தி வந்தார் நயீம். 15 வருட காலமாக தேடப்பட்டு வந்த நயீம் ஒருவழியாக தெலுங்கானா போலீசாரின் என்கவுண்டரில் இன்று கொல்லப்பட்டுள்ளார். இது பொதுமக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications