பாலியல் புகார்- நீதிபதி கங்குலிக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

NCW takes suo moto cognizance of AK Ganguly sexual harassment case
டெல்லி: சட்ட பயிற்சி மாணவி கூறிய பாலியல் புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலிக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்ட பயிற்சி மாணவி ஒருவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று தமது வலைபக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுத்தவர் நீதிபதி ஏ.கே. கங்குலி என தெரியவந்ததது. இதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் அக்குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.

இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வெளியிட்ட அறிக்கையில், கங்குலி மீதான புகாருக்கு முகாந்திரம் இருக்கிறது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஏ.கே. கங்குலி மீதான புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

மேலும் தம் மீதான புகார் குறித்து ஏ.கே. கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் இன்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறது. அத்துடன் சட்ட பயிற்சி மாணவியின் புகார் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கேட்டு டெல்லி போலீசுக்கும் மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+