என்டிடிவி விற்பனை செய்யப்பட்டதா? தீயாய் பரவும் தகவல்கள்.. உண்மை என்ன?
என்டிடிவி செய்தி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன.
Recommended Video

டெல்லி : பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் பெரும்பாலான பங்குகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
செய்தி ஊடகங்களில் பழமை வாய்ந்த நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடட்(என்டிடிவி) பிரன்னாய் ராய் மற்றும் ராதிகா ராயால் 1988ல் தொடங்கப்பட்டது. இந்த தொலைக்காட்சியின் பங்குகள் கைமாறியதாக செய்திகள் பரவின. சமூக வலைத்தளங்களில் டிவி பெயர் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
செய்தி சேனலின் நிறுவனர்களின் பங்குகள் 20 சதவீதமாக குறைந்தள்ளதாகவும், ஸ்பைஸ் ஜெட்டின் அஜய் சிங்கிடம் 40 சதவீத பங்குகள் கைமாற உள்ளதாக செய்திகள் பரவின.

உண்மையில்லை
ஆனால் இந்த தகவலில் துளியளவும் உண்மையில்லை என்று எம்டிடிவியின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்றே அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

சிபிஐ சோதனை
கடந்த சில மாதங்களாகவே என்டிடிவிக்கு எதிரான நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. ஜூன் 5ல் பிரன்னாய் ராய் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இது ஊடக சுதந்திரம் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று என்டிடிவி அப்போது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது.

தடை செய்த மத்திய அரசு
மேலும் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற பதான்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்து செய்தி ஒளிபரப்பியதற்காக என்டிடிவியின் ஒரு நாள் ஒளிபரப்பிற்கு அப்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த வெங்கய்ய நாயுடு தடை விதித்து உத்தரவிட்டார்.

என்டிடிவிக்கு நெருக்கடி
பதான்கோட் விமான தளம் குறித்த பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டு தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் பத்திரிக்கையாளர்களின் கடுமையான எதிர்ப்புகள் மற்றம் உச்சநீதிமன்ற உத்தரவால் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications