என்டிடிவி விற்பனை செய்யப்பட்டதா? தீயாய் பரவும் தகவல்கள்.. உண்மை என்ன?
என்டிடிவி செய்தி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன.
Recommended Video

டெல்லி : பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் பெரும்பாலான பங்குகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
செய்தி ஊடகங்களில் பழமை வாய்ந்த நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடட்(என்டிடிவி) பிரன்னாய் ராய் மற்றும் ராதிகா ராயால் 1988ல் தொடங்கப்பட்டது. இந்த தொலைக்காட்சியின் பங்குகள் கைமாறியதாக செய்திகள் பரவின. சமூக வலைத்தளங்களில் டிவி பெயர் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
செய்தி சேனலின் நிறுவனர்களின் பங்குகள் 20 சதவீதமாக குறைந்தள்ளதாகவும், ஸ்பைஸ் ஜெட்டின் அஜய் சிங்கிடம் 40 சதவீத பங்குகள் கைமாற உள்ளதாக செய்திகள் பரவின.

உண்மையில்லை
ஆனால் இந்த தகவலில் துளியளவும் உண்மையில்லை என்று எம்டிடிவியின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்றே அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

சிபிஐ சோதனை
கடந்த சில மாதங்களாகவே என்டிடிவிக்கு எதிரான நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. ஜூன் 5ல் பிரன்னாய் ராய் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இது ஊடக சுதந்திரம் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று என்டிடிவி அப்போது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது.

தடை செய்த மத்திய அரசு
மேலும் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற பதான்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்து செய்தி ஒளிபரப்பியதற்காக என்டிடிவியின் ஒரு நாள் ஒளிபரப்பிற்கு அப்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த வெங்கய்ய நாயுடு தடை விதித்து உத்தரவிட்டார்.

என்டிடிவிக்கு நெருக்கடி
பதான்கோட் விமான தளம் குறித்த பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டு தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் பத்திரிக்கையாளர்களின் கடுமையான எதிர்ப்புகள் மற்றம் உச்சநீதிமன்ற உத்தரவால் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications