படேலின் மதச்சார்பின்மைதான் தேவை.. வாக்கு வங்கி மதச்சார்பின்மை தேவையில்லை: மோடி
அகமதாபாத்: நாட்டுக்கு தேவை சர்தார் படேலின் மதச்சார்பின்மைதானே தவிர வாக்கு வங்கி அரசியலுக்கான மதச்சார்பின்மை அல்ல என்று பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் சர்தார் படேலின் 138வது பிறந்த நாளை ஒட்டி அவரது உருவசிலையை திறந்து வைத்து பேசிய மோடி, சர்தார் படேலை ஒரு கட்சிக்கு உரியவராக அடையாளப்படுத்துவது அவரை சிறுமைப்படுத்துவதாகும். அவர்தான் உண்மையான மதச்சார்பின்மையாளர்.

நமக்கு இப்போது தேவையும் சர்தார் படேலின் மதச்சார்பின்மை கோட்பாடுதான். வாக்கு வங்கி அரசியலுக்காக சொல்லப்படும் மதச்சார்பின்மை அல்ல.. மதச்சார்பின்மையை கடைபிடித்த படேல்தான் இந்தியாவை ஒருங்கிணைத்தார் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங்கும் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் பங்கேற்றனர். அப்போது சர்தார் படேல் முதல் பிரதமராகி இருந்தால் இந்த நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும் என்று மோடி பேசியிருந்தார். இதற்கு பதில் தரும் விதமாக சர்தார் படேல் ஒரு காங்கிரஸ்காரர் என்று பிரதமர் மன்மோகன்சிங் பேசியிருந்தார்.
இதற்கு பதில் தரும் வகையிலேயே இன்று மோடி, படேலை ஒரு கட்சிக்குரியவராக அடையாளப்படுத்தக்கூடாது என்று பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications