நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவு- உள்துறை அமைச்சகம் ஏற்பு!
நீட் தேர்வுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தமிழக அரசு மத்திய அரசிடம் இன்று தாக்கல் செய்தது.
டெல்லி: நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவை உள்துறை அமைச்சகம் ஏற்றது.
கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு போராடி வந்தது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கும் சட்ட வரைவை மத்திய அரசிடம் தமிழக அரசு ஏற்கெனவே சமர்ப்பித்தது.
எனினும் அந்த வரைவு மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக அமைச்சர்கள் மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்க அளிக்க சட்ட வரைவு கொண்டு வந்தால் அதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தயார் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

தமிழக அரசு இயற்றியது
இதைத் தொடர்ந்து அவசர சட்ட வரைவை மத்திய உள்துறை இணைச் செயலர் மித்ராவிடம் சமர்ப்பித்தார். அதை ஆய்வு செய்த மித்ரா, கூடுதல் ஆவணங்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் மத்திய அரசு கோரிய ஆவணங்களை ராதாகிருஷ்ணன் தயார் செய்து அதை பிற்பகலில் மத்திய உள்துறை இணைச் செயலர் மித்ராவிடம் மீண்டும் சமர்ப்பித்தார்.

சட்ட வரைவு ஏற்பு
இதை அந்த துறை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தது. மேலும் இந்த சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்திலிருந்து சுகாதாரத் துறை, மனிதவள மேம்பாடு, சட்டத் துறை ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஜனாதிபதி ஒப்புதலுக்கு...
அந்த 3 அமைச்சகங்களும் ஒப்புதல் அளித்தவுடன் உள்துறை அமைச்சகம் மூலம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் ஒப்புதலைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு அனுப்பப்படும்.

ஆளுநர்
தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலுடன் மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும். இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க்கும் அவசர சட்டம் முறையாக பிறப்பிக்கப்படும்.












Click it and Unblock the Notifications