இந்தியாவில் பெண்களுக்கு மரியாதையே இல்லை என்றேனா?: சானியா அந்தர் பல்டி
டெல்லி: இந்தியாவில் பெண்களுக்கு மரியாதையே இல்லை என்று நான் கூறவே இல்லை என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் தெற்காசிய பகுதிக்கான பெண்கள் குட்வில் அம்பாசிடராக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சானியா பேசுகையில்,

இந்தியாவில் சானியா மிர்சாவாக இருப்பது கடினம். இங்கு ஆண்களும், பெண்களும் சரிசமம் என்று பார்ப்பது இல்லை. ஒரு பெண் என்பதால் நான் பல சர்ச்சைகளில் சிக்கினேன். இந்தியாவில் பெண்களுக்கு மரியாதை கிடையாது. பெண்களை விலங்குகளை போன்று நடத்துகிறார்கள் என்று தனது மனதில் உள்ள ஆதங்கத்தை தெரிவித்தார்.
இதை பார்த்த பலரும் சானியாவை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இது குறித்து சானியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியாவில் பெண்களுக்கு மரியாதையே இல்லை என்று நான் கூறவில்லை. இந்த பகுதிக்கான அம்பாசிடர் நான். நாடு தனது அன்பை காட்டவில்லை என்றால் என்னால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. நான் கொடுத்து வைத்தவள், மிகவும் கொடுத்து வைத்தவள்.
ஆனால் உலகின் இந்த பகுதியில் பல பெண்கள் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் பெண் என்பதால் அவர்களின் கனவை நினைவாக்க முடியாவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications