ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
புவனேஸ்வரம்: ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவின் பேரில் 20 அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றனர்.
ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் மே 29ஆம் தேதியுடன் தனது 3 ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்துவிட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக மாநில உள்ள அனைதது அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர்.

திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பத்மநாப பெஹரா, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு, நீர் வளத் துறை அமைச்சர் ரகுநந்தன தாஸ், எஃகு மற்றும் சுரங்கங்கள் பணித் துறை அமைச்சர் பிரபுல்லா குமார் மாலிக், திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் பிரேமானந்தா நாயக் உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த நிலையில் சபாநாயர் சுர்ஜய நாராயணன் பட்ரோவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக தனது அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு முதல்வர நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டார்.
புதிய அமைச்சர்கள் இன்று காலை தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ராஜ்பவனில் மாநாட்டு மண்டபத்தில் பதவியேற்றார்கள். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே கட்சியை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த மறு சீரமைப்பு பார்க்கப்படுகிறது.
நவீன் பட்நாயக் கடந்த 2019ஆம் ஆண்டு 5ஆவது முறையாக ஒடிசா முதல்வராக பதவியேற்றார். அவரை தொடர்ந்து 20 அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் பதவியேற்றனர்.












Click it and Unblock the Notifications