For Daily Alerts
Just In
டெல்லி மீது விமானம் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உள்துறை அமைச்சகம் வார்னிங்
டெல்லி: டெல்லி மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
- டெல்லியின் 15 இடங்கள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளவை.
- இதில் பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சர், துணை ஜனாதிபதி இல்லங்கள், ஜனாதிபதி மாளிகை, ராஜ்பத், இந்தியா கேட், சிபிஐ, சி.ஐ.எஸ்.எப்., பி.எஸ்.எப். தலைமையகங்கள் அடங்கும்.
- தீவிரவாதிகள் தங்களது தாக்குதல்களுக்கு ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம்.
- சந்தேகப்படும்படியான பொருட்கள் வானில் பறந்தால் உடனே அதை சுட்டு வீழ்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.
- டெல்லிக்கு பல முறை தீவிரவாத இயக்கங்கள் அச்சுறுத்தல் விடுத்திருந்த நிலையில் தற்போது விமானம் மூலம் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதால் கண்காணிப்பாக இருக்க வேண்டும்.
- இவ்வாறு உள்துறை அமைச்சக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
New Delhi is under a serious threat of aerial strikes from different terror outfits including the ISIS, the Ministry of Home Affairs said.
Story first published: Saturday, November 28, 2015, 15:33 [IST]