ரூ.13,000 கோடி நெடுஞ்சாலை திட்டத்துடன் 'வேலையை' ஆரம்பிக்கப் போகும் நரேந்திர மோடி!
டெல்லி: மத்தியில் புதிதாக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு முதல் வேலையாக ரூ. 13,000 கோடி மதிப்பிலான சாலை திட்டத்தை செயல்படுத்த தயாராகிவருகிறது. இதில் டெல்லி-மீரட் இடையேயான 16 வழிச் சாலையும் அடங்கும்.
இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், தனியாரின் கூட்டுடன் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை பணிகளை தொடங்க திட்டம் தயாராக உள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் பணிகள் தொடங்கும். எங்கள் துறையில் முடிக்க வேண்டிய பணிகள் முடிவடைந்துவிட்டன. அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் டெண்டர் பணிகளை துவக்கி விடுவோம் என்றார்.

ஓடிசா, பஞ்சாப், கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான்...
இந்த திட்டத்தின் மூலமாக, ஓடிசா, பஞ்சாப், கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலுள்ள இருவழி நெடுஞ்சாலைகள் 4 வழிப்பாதைகளாக மாற்றப்படும்.

டெல்லி- மீரட் 16 வழிச்சாலை....
டெல்லிக்கும் குஜராத் மாநிலம் மீரட்டுக்கும் நடுவேயான 150 கிலோமீட்டர் நெடுஞ்சாலையில் 27 கிலோமீட்டர் தூரம், 16 வழிச்சாலைகளாக மாற்றப்படும். இந்த சாலை திட்டத்தை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே செயல்படுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் முடியாமல் போனது.

நெடுஞ்சாலை பணிகளில் சுணக்கம்
கடந்த ஒரு வருடமாக நெடுஞ்சாலை பணிகளில் மிகவும் சுணக்கம் ஏற்பட்டது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பல திட்டங்களுக்கு கிடைக்காததும், பொருளாதார மந்தநிலையும்தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

2010 முதல் 12 வரை ஓ.கே....
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி வகித்த 10 ஆண்டுகளில், 2010 முதல் 2012 வரையிலான கால கட்டம் சாலைப் பணிகளுக்கான பொற்காலமாக பார்க்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில் ரூ.1.47 லட்சம் கோடி செலவில் 147 சாலை வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications