ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் புதிய நீதிபதி பதவியேற்பு! அதிமுக வழக்கறிஞர்கள் வெளியேற்றம்!!

1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வர் பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வு பெற்ற நிலையில் தற்காலிக நீதிபதியாக முடிகவுடர் நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு ஜான் மைக்கேல் டிகுன்ஹா புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை ஜான் மைக்கேல் டிகுன்ஹா பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் நீதிபதி முடிகவுடர் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இல்லாத நேரங்களில் ஜெயலலிதா உட்பட 4 பேரின் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் மற்றும் அ.தி.மு.க. பெங்களூரு பிரமுகர்கள் அங்கேயே உட்கார்ந்துகொண்டிருப்பார்கள்.
இன்று அவர்களை யார் என்று கேட்டறிந்த ஜான் மைக்கேல் டிகுன்ஹா, உடனே அங்கிருந்து வெளியேறும்படி முதல் உத்தரவை பிறப்பித்தார்












Click it and Unblock the Notifications