Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் புதிய நீதிபதி பதவியேற்பு! அதிமுக வழக்கறிஞர்கள் வெளியேற்றம்!!

Subscribe to Oneindia Tamil

New judge sworn in Jayalalithaa case
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டிகுன்ஹா இன்று பதவியேற்றார். அப்போது அதிமுக வழக்கறிஞர்கள், பிரமுகர்களை நீதிமன்ற அறையிலிருந்து அவர் வெளியேற உத்தரவிட்டார்.

1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வர் பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வு பெற்ற நிலையில் தற்காலிக நீதிபதியாக முடிகவுடர் நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு ஜான் மைக்கேல் டிகுன்ஹா புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை ஜான் மைக்கேல் டிகுன்ஹா பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் நீதிபதி முடிகவுடர் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இல்லாத நேரங்களில் ஜெயலலிதா உட்பட 4 பேரின் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் மற்றும் அ.தி.மு.க. பெங்களூரு பிரமுகர்கள் அங்கேயே உட்கார்ந்துகொண்டிருப்பார்கள்.

இன்று அவர்களை யார் என்று கேட்டறிந்த ஜான் மைக்கேல் டிகுன்ஹா, உடனே அங்கிருந்து வெளியேறும்படி முதல் உத்தரவை பிறப்பித்தார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+