மகாத்மா காந்தி எப்படி கொல்லப்பட்டார்... மொத்தமாக மீண்டும் விசாரணை செய்யப்படுகிறதா ?
மகாத்மா காந்தியின் மரணத்தைப் பற்றி மீண்டும் விசாரிக்க கோரிய வழக்கை ஆய்வு செய்ய அமரேந்திர சரண் என்ற வழக்கறிஞரை நியமித்துள்ளது உச்சநீதிமன்றம்.
டெல்லி : மகாத்மா காந்தியின் மரணத்தைப் பற்றி மீண்டும் விசாரிக்க கோரிய வழக்கை ஆய்வு செய்ய அமரேந்திர சரண் என்ற வழக்கறிஞரை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம். டாக்டர். பங்கஜ் பாண்டீஸ் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் , இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளது.
நாதுராம் கோட்சேவால் 1948 ஜனவரி மாதம் 30-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார் மகாத்மா காந்தி. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இந்த மரணத்தைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று டாக்டர். பங்கஜ் பாண்டீஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் விரிவான சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். முதலாவதாக வழக்கு தொடுத்த டாக்டர். பங்கஜ் பாண்டீஸ்க்கு நன்றி தெரிவித்த நீதிபதிகள் , உங்களது இந்த ஆர்வத்துக்கும் , உண்மையை கண்டுபிடிக்க விரும்பும் குறிக்கோளுக்கும் மிக்க நன்றி. ஆனால் மறுவிசாரணை குறித்து அவ்வளவு எளிதாக முடிவெடுத்துவிட முடியாது" என்று கூறினார்.
அப்போது வழக்கு தொடுத்த டாக்டர். பங்கஜ் பாண்டீஸ் தரப்பு வழக்கறிஞர், மகாத்மா காந்தியின் மீது 4 குண்டுகள் பாய்ந்து இறந்துள்ளார், 3 குண்டுகள் பாய்ந்ததாக மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த நான்காவது குண்டு எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க குழு அமைக்க வேண்டும் " என்று வாதிட்டார். மேலும், காந்தி கொலையில் ''போர்ஸ் 136'' என்ற பிரிட்டிஷ் அமைப்பு ஈடுபட்டிருக்கலாம் ' என்றும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
டாக்டர். பங்கஜ் பாண்டீஸ் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் , காந்தியின் மரணத்தில் மறுவிசாரணை செய்ய தேவை இருக்கிறதா என்பதை ஆராய அமரேந்திர சரண் என்ற மூத்த வழக்கறிஞரை நியமித்தது. இவர் காந்தியின் மரணம் குறித்து மறுவிசாரணை செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்வார்.
வழக்கு தொடுத்த டாக்டர். பங்கஜ் பாண்டீஸ் என்பவர் தீவிர இந்து மகா சபா உறுப்பினர் ஆவார். காந்தி கொலையில் தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்ஸேவும் , நாராயண் ஆப்தேவும் இந்து மகா சபையில் உறுப்பினர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications