22 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பிரதமர் மோடியின் குஜராத்துக்கு மட்டும் 5...
அகமதாபாத்: மத்திய அரசு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் 22 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதில் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்துக்கு மட்டும் 5 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் சதானந்த கவுடா இன்று ரயில்வே பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதில் பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்துக்கு கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது.
நாட்டின் முதலாவது புல்லட் ரயிலானது மும்பை- அகமதாபாத் (குஜராத்) இடையே இயக்கப்படும் என்று அறிவித்த கையோடு 22 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஐந்து குஜராத்துக்கு என்றும் அறிவித்தார்.
5 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்:
மும்பை- பாலிதானா (வாராந்திரம்)
ஹபா- நாக்பூர்- பிலாஸ்பூர் (வாராந்திரம்)
அகமதாபாத் - வாரணாசி பாட்னா (வாராந்திரம்)
அகமதாபாத்- வாசிரோடு- சென்னை (வாராந்திரம்)
ராஜ்கோட்- ரேவா (வாராந்திரம்)
இவை தவிர அகமதாபாத்- தர்பங்கா இடையே ஜனசதாரன் ரயில் ஒன்றும் சூரத் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.