Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ. 42 லட்சம் கொள்ளை போனதாக டிராமா: 'மாமியார்' வீட்டுக்குப் போன புது மாப்பிள்ளை!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பட்டபகலில் பைக்கில் வந்த கொள்ளையர்கள் ரூபாய் 42 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக நாடகமாடிய புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம் அருகே அண்ணூர் பகுதியை சேர்ந்தவர் அசோகன் . இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை இவர் அழுதபடியே பூஜப்புரா காவல் நிலையம் வந்தார்.

பணத்தை பறித்துச் சென்றதாக புகார்:

அப்போது அவர், தான் வீடு வாங்குவதற்காக காரில் ரூபாய் 42 லட்சம் பணத்துடன் வந்ததாகவும், பைக்கில் வந்த 2 பேர் காரை வழிமறித்து பணத்தை பறித்து சென்றதாகவும் கூறினார்.

கிடுக்கிப்பிடி விசாரணை:

இதையடுத்து, சந்தேகமடைந்த போலீசார் அசோகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது குட்டு வெளிப்பட்டது.

வீடு வாங்குவதாக நாடகம்:

இது குறித்து போலீசார் கூறுகையில், "அசோகன் பெண் வீட்டாரிடம் தான் ஒரு வீடு வாங்க போவதாக கூறியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் மணப்பெண்ணை அழைத்துச் சென்று தான் வாங்க போவதாகக் கூறி ஒரு வீட்டையும் காண்பித்துள்ளார்.

அட்வான்ஸ் தொகை:

இந்நிலையில் நேற்று வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் தொகை ரூபாய் 42 லட்சத்தை கொடுக்க போவதாகவும் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் அவரிடம் வீடு வாங்குவதற்கான பணம் கிடையாது.

பெண் வீட்டாரிடம் பணம் பறிக்க திட்டம்:

அந்த பணத்தை பறிபோனதாக நாடகமாடி பெண் வீட்டாரிடம் இருந்து வாங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ஒரு சில மணி நேரத்திலே குட்டு வெளிப்பட்டது" என்றனர். போலீசார் அசோகனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+