ரூ. 42 லட்சம் கொள்ளை போனதாக டிராமா: 'மாமியார்' வீட்டுக்குப் போன புது மாப்பிள்ளை!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பட்டபகலில் பைக்கில் வந்த கொள்ளையர்கள் ரூபாய் 42 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக நாடகமாடிய புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம் அருகே அண்ணூர் பகுதியை சேர்ந்தவர் அசோகன் . இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை இவர் அழுதபடியே பூஜப்புரா காவல் நிலையம் வந்தார்.
பணத்தை பறித்துச் சென்றதாக புகார்:
அப்போது அவர், தான் வீடு வாங்குவதற்காக காரில் ரூபாய் 42 லட்சம் பணத்துடன் வந்ததாகவும், பைக்கில் வந்த 2 பேர் காரை வழிமறித்து பணத்தை பறித்து சென்றதாகவும் கூறினார்.
கிடுக்கிப்பிடி விசாரணை:
இதையடுத்து, சந்தேகமடைந்த போலீசார் அசோகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது குட்டு வெளிப்பட்டது.
வீடு வாங்குவதாக நாடகம்:
இது குறித்து போலீசார் கூறுகையில், "அசோகன் பெண் வீட்டாரிடம் தான் ஒரு வீடு வாங்க போவதாக கூறியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் மணப்பெண்ணை அழைத்துச் சென்று தான் வாங்க போவதாகக் கூறி ஒரு வீட்டையும் காண்பித்துள்ளார்.
அட்வான்ஸ் தொகை:
இந்நிலையில் நேற்று வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் தொகை ரூபாய் 42 லட்சத்தை கொடுக்க போவதாகவும் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் அவரிடம் வீடு வாங்குவதற்கான பணம் கிடையாது.
பெண் வீட்டாரிடம் பணம் பறிக்க திட்டம்:
அந்த பணத்தை பறிபோனதாக நாடகமாடி பெண் வீட்டாரிடம் இருந்து வாங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ஒரு சில மணி நேரத்திலே குட்டு வெளிப்பட்டது" என்றனர். போலீசார் அசோகனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
காங்கிரஸின் ஒரே நம்பிக்கையிலும் ஆப்பு.. கேரளா சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! என்ன இப்படி ஆகிடுச்சு -
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications