பிரதமர் பதவிக்கு தகுதியானவர்- "இந்தியாவின் பராக் ஒபாமா" மாயாவதி!!
இந்தியாவின் பராக் ஒபாமா என்று மாயாவதியை அமெரிக்கா வார இதழ் ஒன்று புகழாரம் சூட்டியிருந்தது.
டெல்லி: பிரதமர் பதவிக்கு தகுதியானவர் மாயாவதி என்று அமெரிக்காவின் வார இதழ் ஒன்று மகுடம் சூட்டியது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக உள்ள மாயாவதி கடந்த 1956-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி பிறந்தவர். தலித் சமூகத்தை சேர்ந்த இவர் அச்சமூக மக்களுக்காக பாடுபட்டார்.

முதல் தலித் பெண் முதல்வராக திகழ்ந்தார். 4 முறை உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். இவர் முதல்வராக இருந்த காலத்தில் புத்தர், ரவிதாஸ், கபீர், நாராயணா குரு, சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர், பெரியார், பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கான்ஷி ராம் ஆகியோரின் சிலைகளை திறந்துவைத்தார்.
மேலும் தன் கட்சியின் சின்னமான யானையின் சிலைகளை அவர் ஆங்காங்கே நிறுவியதால் சர்ச்சையில் சிக்கினார். கடந்த 2007-ஆம் ஆண்டு நியூஸ் வீக் என்ற அமெரிக்காவின் வார இதழ் ஒன்று மாயாவதியை இந்தியாவின் பராக் ஒபாமா என்றும் , பிரதமர் பதவியை வகிக்க தகுதியானவர் என்றும் புகழாரம் சூட்டியிருந்தது.
கடந்த 2008 உலகில் ஆற்றமிக்க 100 பெண்களில் மாயாவதிக்கு 59-ஆவது இடத்தை அளித்தது போர்ப்ஸ் பத்திரிகை. தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ள அவர் தலித் மீதான தாக்குதல் குறித்து பேச வாய்ப்பளிக்காவிட்டால் தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று இன்று தெரிவித்தார். அதன்படி அவர் ராஜினாமா செய்துவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications