ஜனாதிபதி தேர்தல்.. மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராம் நாத் கோவிந்த்
ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்காரரான ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. பாஜக தனது வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. அதே போன்று போன்று எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல்
இந்நிலையில், பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் ராம் நாத் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மோடி முன்னிலை
பிரதமர் மோடியின் முன்னிலையில் ராம் நாத் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர்
தமிழக முதல்வர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் ராம் நாத் வேட்புமனு தாக்கல் செய்த போது உடன் இருந்தனர்.

ஆதரவு
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக பழனிச்சாமி, நிதீஷ் குமார், நவீன் பட்நாயக், சந்திர சேகர் ராவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராம் நாத் கோவிந்துக்கு கிட்டத்தட்ட 61 சதவீத ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications