106 விவசாயிகள் மரணம்.. தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
விவசாயிகள் மரணம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: விவசாயிகள் தொடர் மரணம் குறித்து விளக்கம் அளிக்கக்கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை பொய்துப்போனதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் பயிர்கள் கருகிவிட்டன. வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொத்த விவசாயிகள் பலர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் மரணம் குறித்து விளக்கம் அளிக்கக்கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும்
6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக தலைமை செயலாளாருக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 106 விவசாயிகள் மரணம் அடைந்தது எப்படி என விளக்க அளிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications