Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்.ஐ.ஏ அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட பரபரப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: என்.ஐ.ஏ அதிகாரி தன்சில் அகமது டெல்லி அருகே சாலையில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்ட பரபரப்பு வழக்கு தொடர்பாக, 35 வயது மதிப்புள்ள குற்றவாளியை காசியாபாத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளியிடமிருந்து 9 பிஸ்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான முனீர், இதற்கு முன்பு மேலும் 2 கொலை வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

NIA officer's murder cracked- How a two month chase led to arrest of main accused

தன்சில் அகமது (45), கடந்த ஏப்ரல் 3ம் தேதி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, குடும்பத்தோடு வேகன்-ஆர் ரக காரில் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தபோது, ஒரு பைக்கில் வந்த இரு நபர்கள், இடையில் வழிமறித்து, தன்சில் அகமதுவை சுட்டு கொலை செய்தனர்.

மொத்தம், 24 ரவுண்டுகள் சுடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் தன்சில் அகமது. இந்த தாக்குதலில் தன்சில் மனைவி பர்சானா கதூனும் கொலை செய்யப்பட்டார்.

அதேநேரம், தந்தையின் அறிவுரையை கேட்டு, சட்டென சீட்டுக்கு அடியில் குனிந்து பதுங்கிக்கொண்ட தன்சில் அகமதுவின் 14 மற்றும் 12வயதுள்ள இரு குழந்தைகளும் உயிர் தப்பினர்.

சொத்து தகராறு அல்லது தனிப்பட்ட விரோதம் இக்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. தன்சில் அகமதுவின் குடும்பத்தாரில் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+