For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலியல் குற்றச்சாட்டு வழக்கு... ராம்நகர் கோர்ட்டில் ஆஜரானார் நித்தியானந்தா

By Veera Kumar
Google Oneindia Tamil News

முன்னாள் சிஷ்யை ஆரத்தி ராவ் தொடர்ந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையின்போது 'தான் ஒரு ஆண்மகன் இல்லை, 6 வயது குழந்தையின் உடல்தான் தனக்கு உள்ளது' என்று தெரிவித்தார் நித்தியானந்தா. எனவே அவர் ஆண்தானா, அல்லது ஆண் அளவுக்கு அவர் வளர்ச்சியடையவில்லையா என்பதை சோதித்து பார்க்க கோர்ட் முடிவு செய்தது.

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 13-ந் தேதி இடைத் தேர்தல்- 16-ல் வாக்கு எண்ணிக்கை

இதையடுத்து நித்தியானந்தா சாமியாரிடம் செப்டம்பர் 8ம்தேதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. சிஐடி போலீசார் ஏற்பாட்டின் பேரில் பெங்களூரிலுள்ள விக்டோரியா அரசு பொது மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனை முடிவு, ராம்நகர் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நவம்பர் 26ம்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும், இவ்வழக்கு விசாரணை வந்தது. நீதிமன்றத்தில் ஆஜராக நித்தியானந்தா மற்றும் அவரது சிஷ்யர்கள் வந்திருந்தனர். விசாரணை நடத்திய நீதிபதி மஞ்சுளா, அடுத்த மாதம் 11ம்தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

English summary
After doctors conducted tests on Nithyananda to certify his potency on September 8, based on a Supreme Court order against his alleged sexual assault on a woman devotee in his ashram in 2012, his potency test report was submitted in the court on November. In this case hearing was postponed to Februvary 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X