பா.ஜ.க.வில் சரவெடியாய் மோதல்: அத்வானி, ஜோஷி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரும் கட்காரி!!
டெல்லி: பீகார் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பா.ஜ.க.வுக்குள் தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வரும் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சாந்தகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் தோல்விகளுக்கான உண்மையான காரணங்களை ஆராய வேண்டும் என்று அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் டெல்லி தேர்தல் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பீகார் தோல்விக்கு அனைவரும் காரணம் என்று கூறுவது ஒருவரும் அதற்கு பொறுப்பில்லை என்ற பொருளையே கொடுக்கிறது.
தோல்விக்குப் பொறுப்பானவர்கள், தோல்விக்கான காரணங்களை மறு ஆய்வு செய்ய முடியாது. எனவே தோல்விக்கான உண்மையான காரணங்களை முற்று முழுதாக அலசி ஆராய்வதோடு, கட்சியின் கருத்தொருமித்தல் பண்பு சிதைக்கப்பட்டு கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்காக ஆனது எப்படி என்பது பற்றியும் தீவிர மறு ஆய்வு தேவை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:
பீகார் தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டிய தேவையில்லை. இது பற்றி பொறுப்பற்ற முறையில் அறிக்கை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பீகார் தோல்விக்கு பொறுப்பாக முடியாது. இதற்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் பொறுப்பேற்க வேண்டும்.
கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இது குறித்து அறிக்கை விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு நான் அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளேன்.
மகா கூட்டணி பீகார் வலுவடைந்துள்ளது. அங்கு நாமும் வலுப்பெறுவதற்கான வழிவகைகளைக் கண்டடைய வேண்டும்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications