தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகவில்லை: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம், செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய விஜயகாந்த் கூறியதாவது:
ஏற்காடு தேர்தலில் போட்டியிட்டால் மாற்றம் ஏதுவும் வந்துவிடப்போவதில்லை. ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு பயம் காரணம் அல்ல என்றும் விஜயகாந்த் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர் "தமிழகத்தை ஆளும் தகுதி ஜெயலலிதாவிற்கு இல்லை. முதலில் அவர் மின்சாரத்தை கொடுக்கட்டும். அதன் பின்னர் மற்ற விஷயங்களை பேசலாம். மின்வெட்டு உள்ளிட்ட தீர்க்கப்படாத பல பிரச்னைகள் தமிழகத்தில் உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications