நாடு முழுவதும் மேலும் 3 நாட்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து
நாடு முழுவதும் மேலும் 3 நாட்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகாத நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் நவம்பர் 14ம் தேதி வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி 8ம் தேதி இரவு அறிவித்தார். இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து கையில் இருந்த பணத்தை செலவு செய்ய முடியாத சூழல் உருவானது. மேலும் வங்கியும் முதல் நாள் விடுமுறை அளிக்கப்பட்டு நேற்றில் இருந்துதான் இயங்கி வருகிறது. மேலும், ஏடிஎம்களும் 2 நாட்களாக இயங்கவில்லை.

இதனால் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை செலுத்தும் வாகன ஓட்டிகள் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செலுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள். இதன் காரணமாக பல சுங்கச்சாவடிகளில் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை சமாளிப்பதற்காக சில இடங்களில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.
இந்நிலையில், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார். இதனையடுத்து வாகன ஓட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக சிரமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி வந்தனர்.
இன்று நள்ளிரவோடு இந்த சுங்கக் கட்டணம் ரத்து முடிவடைய உள்ளதால், மீண்டும் 3 நாட்களுக்கு அதாவது நவம்பர் 14ம் தேதி நள்ளிரவு வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications