ஜல்லிக்கட்டு.. பொங்கலுக்குள் தீர்ப்பு வழங்க முடியாது.. உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் ஜனவரி 14க்குள் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிமனஅற செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கை இதை தெளிவுபடுத்துகிறது.

ஜல்லிக்கட்டு நடத்த வழி செய்யும்வகையில் கடந்த வருடம் ஜனவரி 7ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து, தமிழகம் தொடர்ந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆர்.எப்.நாரிமன் முன்னிலையிலான அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது.

No Jallikattu on this Pongal too as SC rejects plea for early judgementNo Jallikattu on this Pongal too as SC rejects plea for early judgement

விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று அல்லது இன்று தீர்ப்பு வெளியாகும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தீர்ப்பு தயாரிப்பு பணிகள் முடியாததால் பொங்கல் விடுமுறைக்கு முன்பாக தீர்ப்பை கோர்ட் வெளியிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் தகவல் தொடர்பு அதிகாரி, ராகேஷ் ஷர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த வழக்கு தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் அடங்கிய பெஞ்சால் விசாரிக்கப்பட்டது என்றும், நீதிபதி பானுமதி வழக்கை விசாரிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சில ஊடகங்களில் அதுபோன்ற செய்தி வெளியாகியிருந்த நிலையில் இதுபோன்ற அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வெளியாக வாய்ப்பில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+