Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் கூறியும் கேட்காத அகிலேஷ் யாதவ்.. காங்., ‛கை’விட்டு மம்தாவுடன் புதிய கூட்டணி முடிவு! பின்னணி

சென்னையில் தனது 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவராகவும் உள்ள அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் சொல்லியும் கேட்காமல் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியை புறம்தள்ளிவிட்டு புது கூட்டணிக்கு மம்தா பானர்ஜியுடன் அடித்தளம் போட்டுள்ளதன் பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான ஸ்டாலின் இந்த மாத தொடக்கத்தில் தனது 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இந்த விழாவையொட்டி இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான சித்தாந்ஙகள் கொண்ட கட்சி தலைவர்களை அழைத்து பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி சென்னை நந்தனத்தில் திமுக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்(உத்தர பிரதேச எதிர்க்கட்சி தலைவர்), ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்(பீகார் துணை முதல்வர்), காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு

இந்த 4 தலைவர்களும் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களையும் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தனர். மேலும் இந்த கூட்டத்தின்போது மல்லிகார்ஜூன கார்கே, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை முன்வைத்து கருத்து தெரிவித்து இருந்தனர். மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, ‛‛2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும். தமிழ்நாடு பாஜகவிற்கு ஒரு இடம் கூட வழங்கவில்லை. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். மக்களை வேற்றுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். யார் தலைமை தாங்குவது என்பது முக்கியமில்லை, ஒன்றிணைந்து அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும்'' என்றார்.

ஒன்றிணைய கூறிய ஸ்டாலின்

ஒன்றிணைய கூறிய ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ‛‛இந்திய அரசியலுக்கான புதிய தொடக்க விழா. எனது பயணம் நீண்ட நெடிய பயணம். 2024 தேர்தலில் பாஜகவை ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும். 2024 தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதே முக்கியம்" என்றார். இதன்மூலம் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தார். மேலும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் அவ்வப்போது கூறி வருகிறார்.

அகிலேஷ் யாதவ் ட்விஸ்ட்

அகிலேஷ் யாதவ் ட்விஸ்ட்

இந்த கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற நிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மட்டும் பாராட்டி பேசினார். மாறாக அவர் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி குறித்தும் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பாஜகவை ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும் என்பதை அகிலேஷ் யாதவ் இருந்தபோதே முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதன்மூலம் மேடையில் இருந்த தலைவர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என ஸ்டாலின் மறைமுகமாக தெரிவித்து இருந்தார். இதன்மூலம் இந்த கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்றதால் அவரும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து பாஜகவை எதிர்க்கலாம் என கருதப்பட்டது. தற்போது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

ரூட்டை மாற்றிய அகிலேஷ் யாதவ்

ரூட்டை மாற்றிய அகிலேஷ் யாதவ்

ஆனால் தற்போது அகிலேஷ் யாதவ் தனது ரூட்டை மாற்றி உள்ளார். நேற்று அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். இந்த வேளையில் பாஜக, காங்கிரஸ் இல்லாத வகையில் புதிய கூட்டணியை உருவாக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடம் சமமான தூரத்தை கடைப்பிடிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனை அகிலேஷ் யாதவே உறுதி செய்தார். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் கூறியும் கூட அகிலேஷ் யாதவ் மாற்று பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளார். மம்தா பானர்ஜி தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பாத நிலையில் அகிலேஷ் யாதவ் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய புதிய கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளார். மேலும் இன்னும் சில நாட்களில் மம்தா பானர்ஜி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் சந்திக்க உள்ளார். இதன்மூலம் அவர் தனியாக கூட்டணி அமைக்க உள்ளதில் மீண்டும் தீவிரம் காட்ட உள்ளார்.

 காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்நிலையில் தான் மம்த பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேராமல் விலகுவதன் பின்னணியில் உள்ள என்ன? என்பதற்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது காங்கிரஸ் தற்போது மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் செல்வாக்கை இழந்துள்ளது. இதனால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் தங்களுக்கு எந்த லாபமும் இருக்காது. மாறாக கூட்டணி அமைந்தால் காங்கிரஸ் கட்சி தன்னை முன்னிலைப்படுத்தும். மேலும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக்க முயற்சிக்கும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதன் மூலம் அவர்களை காட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு தான் பலம் அதிகம் என அவர்கள் நம்புகின்றனர். மாறாக, புதிய அணியை கட்டமைத்து மம்தா பானர்ஜி தன்னை தனியாக முன்னிலைப்படுத்த முடியும். இந்த காரணங்களால் தான் அவர்கள் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணியை உருவாக்க நினைக்கின்றனர் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் கூட 2024ல் மத்தியில் பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைத்து ஓரணியில் சேர்ந்து செயல்படுவது தான் சரியானதாக இருக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+