நேரு பல்கலை. விவகாரத்தை என்.ஐ.ஏ விசாரிக்க தேவையில்லை: டெல்லி ஹைகோர்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள், தீவிரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாக மாணவர்கள் நிகழ்ச்சி நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டு குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து டெல்லி ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் பி.டி.அகமது மற்றும் கவுபா ஆகியோர் அடங்கிய ஹைகோர்ட் பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ரஞ்சனா அக்னிகோத்ரி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனு, முதிர்ச்சியற்றது, அவசரத்தனமானது என்று கூறி, ஹைகோர்ட் அதை தள்ளுபடி செய்தது.
காவல்துறை விசாரணை நடத்திவரும் நிலையில், ஏன் அவசரப்பட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்?... என்றும் கேள்வி எழுப்பியது ஹைகோர்ட்.












Click it and Unblock the Notifications