ரியாலிட்டி ஷோ கோயில் செட்டுக்குள் ஷூ அணிந்து சென்ற சல்மான், சாருக்கான் மீது வழக்கு
மும்பை: கோவிலில் ஷூ அணிந்து சென்ற பிரபல பாலிவுட் கதாநாயகர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் மீது டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
டிவி சேனல் ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ் 9' பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பாலிவுட் கதாநாயகர்கள் ஷாருக் கான் மற்றும் சல்மான்கான் ஆகியோர் டெல்லியில் உள்ள ஒரு கோவில் செட் உள்ளே ஷூ அணிந்து நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மத உணர்வை காயப்படுத்தியதாக, புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் இருவர் மீதும் ஏடிஆர் அறிக்கையை டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதில் வேண்டுமென்றே அவர்கள் ஷூ அணிந்து சென்று, மத உணர்வை புண்படுத்தவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் அடுத்த விசாரணை வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதியன்று நடைபெறுகிறது.
மேலும், நடிகர் ஷாருக் கான் தன் வீட்டின் முன் அமைத்த சட்டவிரோத ராம்ப் வசதிக்காக அவர் மீது ரூ. 1.93 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications