20 தமிழர் படுகொலை.. ஆந்திரா அரசுக்கு "வக்காலத்து" வாங்கும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு!
ஹைதராபாத்: 20 தமிழரை அநியாயமாக சுட்டுப் படுகொலை செய்த ஆந்திரா அரசின் செயலை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நியாயப்படுத்தியுள்ளார்.
திருப்பதி அருகே 20 தமிழரை படுகொலை செய்தது ஆந்திரா காவல்துறை. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படுகொலையை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வன்மையாகக் கண்டித்துள்ளார். ஆனால் ஆந்திராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நியாயப்படுத்தி பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் போன்ற சமூகவிரோதிகளுக்கு யாரும் ஆதரவாக இருக்க வேண்டாம்.. செம்மரம் வெட்டுவதற்கு வந்தால் சுட்டுக் கொல்வோம் என்று ஆந்திர அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அதன் பின்னரும் அவர்கள் மரம் வெட்ட வந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஆந்திரா முதல்வருடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். அரசின் அறிக்கையைப் படித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications