மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு !
டெல்லி: மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணை நிறுவனங்கள் எரிபொருள் விலையை, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி கடந்த டிசம்பர் மாதம், மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.657.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.671 ஆகவும், மும்பை மற்றும் சென்னையில் ரூ.671.50 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இனி சிலிண்டர் மானியம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications