Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடக்கு ரயில் பாவங்கள்.. பயணிகள் முன்னிலையில் ரயிலில் கேஷ்வலாக மது அருந்திய வட மாநில இளைஞர்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: வட மாநில தொழிலாளர்களின் ரயில் பயணத்தில் ஏராளமான சம்பவங்கள் நடக்கும். சில சம்பவங்கள் நகைச்சுவையாகவும், சில சம்பவங்கள் அட்ராசிட்டியாகவும் இருக்கும். பரிதாபங்கள் சேனலின் வடக்கு ரயில் பாவங்கள் வீடியோ போல, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு மாநில இளைஞர் சக பயணிகள் முன்னிலையில் மது அருந்தி சர்வ சாதாரணமாக பயணித்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த நபரின் நடவடிக்கையால் சக பயணிகள் ஆத்திரமடைந்தனர்.

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமே இல்லை. கட்டுமான தொழில் தொடங்கி உணவு தொழில் வரை அனைத்து துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். வேலை வாய்ப்பு அதிகம் உள்ளதால் வட மாநில தொழிலாளர்கள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை நோக்கி அதிகளவு பயணிக்கிறார்கள்.

North Indian Train

வடக்கு ரயில் பாவங்கள்

வேலைக்காக வரும் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலும் ரயிலை தான் பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு ரயிலிலும் நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் முன்பதிவில்லா டிக்கெட்டில் தான் பயணம் செய்வார்கள். வட மாநில தொழிலாளர்களின் ரயில் பயணம் அனுபவங்களை வடக்கு ரயில் பாவங்கள் என்கிற பெயரில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் கடந்தாண்டு வெளியிட்டது.

லக்கேஜ் வைக்கும் இடத்தில் அமர்வது, கூலி குறைவாக கேட்பது, சத்தமாக பாட்டு வைப்பது, பான்பராக் போட்டு ரயிலை சுகாதாரமின்றி வருவது உள்ளிட்ட பல விஷயங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்காக கோபி, சுதாகரை அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் கூட பாராட்டியிருந்தனர்.

ரயிலில் மது அருந்திய இளைஞர்

இந்நிலையில் பரிதாபங்கள் வீடியோவை விஞ்சுமளவுக்கு ஒரு வட மாநில தொழிலாளர் ரயிலில் அட்ராசிட்டி செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் வட மாநில இளைஞர் ஒருவர் சக பயணிகள் முன்னிலையில் மது அருந்தியுள்ளார். ஜன்னல் ஓரம் ஒற்றை இருக்கையில் சம்மனம் போட்டு அமர்ந்து பாட்டிலை திறந்து, பேப்பர் கப்பில் மது ஊற்றி தயக்கமே இல்லாமல் அருந்தி கொண்டிருந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயிலில் மது அருந்த கூடாது என்று கண்டித்துள்ளனர். ஆனால் பயணிகள் சொல்வதை கண்டுகொள்ளாமல் அந்த இளைஞர் தொடர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளார். இதை ரயிலில் பயணித்த பயணிகள் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பயணிகள் ஆத்திரம்

'டேய்.. இவ்வளவு சொல்லியும் சரக்கு அடிச்சுட்டு இருக்க. டிரெயின்ல சரக்கு அடிக்கலாமா. சரி நீ அடி பார்த்துக்கலாம்." என்று பயணிகள் கூற, அந்த இளைஞர் எதுவும் புரியாதவர் போல கை மற்றும் தலையை அசைத்தபடி இருந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி, அந்த வட மாநில இளைஞரை தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+