"இதெல்லாம் பத்தாது"... கறுப்பு பண விவகாரம் தொடர்பாக மோடிக்கு சாமி கடிதம்
அகமதாபாத்: வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி கடிதம் எழுதியுள்ளார்.
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை' என விமர்சித்தார்.
மேலும், ‘இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, நான் கடிதம் எழுதி அனுப்பி விட்டேன். ஆனால் ஒரு வக்கீலான நிதியமைச்சர் ஜெட்லி இது சரியில்லை. அது சரியில்லை என கூறிக் கொண்டிருக்கிறார்' எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுவரை நிறைய செய்திருக்கலாம். ஆனால் எதையுமே செய்யவில்லை. ஆனால் விரைவில் அவை நடைபெறும் என நம்புகிறேன். பிரதமரின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அவர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு என்றார் சாமி.
கறுப்புப் பணத்தை மீட்டு வர 4 வழிகள் இருப்பதாகவும் சாமி கூறினார். அவர் கூறுகையில், உள்ளூர் கோர்ட் மூலமாக சம்பந்தப்பட்ட நாட்டு கோர்ட்டுக்கு சட்ட ரீதியான கடிதம் அனுப்பி சந்தேகப்பேர்வழிகளின் வங்கிக் கணக்குகளை ஆராய நடவடிக்கை எடுக்கலாம்.
அது சரிப்பட்டு வராவிட்டால் ஜெர்மன் பிரெஞ்சு வழியை பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை நமது வலையில் வீழ்த்தி அவர்களை மடக்கி அதன் மூலம் கறுப்புப் பணம் வைத்துள்ளவர்களின் தகவல்களைக் கறக்கலாம்.
அமெரிக்க பாணியிலும் செயல்படலாம். அதாவது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வங்கியின் இந்திய ஊழியர்களைப் பிடித்து அவர்கள் மீது வழக்குப் போட்டு மடக்க முயற்சிக்கலாம்.
இதையெல்லாம் மோடியால் செய்ய முடியும். அவர் செய்வார் என்று நம்புவோம் என்றார் சாமி.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்!












Click it and Unblock the Notifications