"இதெல்லாம் பத்தாது"... கறுப்பு பண விவகாரம் தொடர்பாக மோடிக்கு சாமி கடிதம்
அகமதாபாத்: வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி கடிதம் எழுதியுள்ளார்.
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை' என விமர்சித்தார்.
மேலும், ‘இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, நான் கடிதம் எழுதி அனுப்பி விட்டேன். ஆனால் ஒரு வக்கீலான நிதியமைச்சர் ஜெட்லி இது சரியில்லை. அது சரியில்லை என கூறிக் கொண்டிருக்கிறார்' எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுவரை நிறைய செய்திருக்கலாம். ஆனால் எதையுமே செய்யவில்லை. ஆனால் விரைவில் அவை நடைபெறும் என நம்புகிறேன். பிரதமரின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அவர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு என்றார் சாமி.
கறுப்புப் பணத்தை மீட்டு வர 4 வழிகள் இருப்பதாகவும் சாமி கூறினார். அவர் கூறுகையில், உள்ளூர் கோர்ட் மூலமாக சம்பந்தப்பட்ட நாட்டு கோர்ட்டுக்கு சட்ட ரீதியான கடிதம் அனுப்பி சந்தேகப்பேர்வழிகளின் வங்கிக் கணக்குகளை ஆராய நடவடிக்கை எடுக்கலாம்.
அது சரிப்பட்டு வராவிட்டால் ஜெர்மன் பிரெஞ்சு வழியை பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை நமது வலையில் வீழ்த்தி அவர்களை மடக்கி அதன் மூலம் கறுப்புப் பணம் வைத்துள்ளவர்களின் தகவல்களைக் கறக்கலாம்.
அமெரிக்க பாணியிலும் செயல்படலாம். அதாவது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வங்கியின் இந்திய ஊழியர்களைப் பிடித்து அவர்கள் மீது வழக்குப் போட்டு மடக்க முயற்சிக்கலாம்.
இதையெல்லாம் மோடியால் செய்ய முடியும். அவர் செய்வார் என்று நம்புவோம் என்றார் சாமி.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications