”லஞ்சம் கொடுத்து கருப்புபணம் மீட்பு” – சுப்பிரமணியன் சாமியின் புதிய ”டெக்னிக்”
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்புப் பணம் குறித்த தகவல்களை அவ்வங்கி உயரதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து பெறலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
கறுப்புப் பண மீட்பு விவகாரத்தில் வெளிநாட்டு வங்கிகள் ஒத்துழைக்கவில்லை என்றால் இம்முயற்சியை உளவுத் துறை மூலம் அரசு மேற்கொள்ளலாம் என சுவாமி தெரிவித்திருக்கிறார்.
இது போன்ற நடைமுறையை ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கடைபிடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குஜராத்தில் நடந்த வணிக அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய அவர் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள கறுப்புப் பண மசோதா, வரி ஏய்ப்போருக்கு தண்டனை தருவதாக மட்டுமே உள்ளது என்றும் அப்பணத்தை மீட்பதற்குரிய வழிகள் அம்மசோதாவில் இடம் பெற வேண்டும் என்றும் கூறினார்.
கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். கறுப்புப் பணத்தை மீட்பதற்கான வழிகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications