பெண்ணை வேவு பார்த்ததற்கும் தேஜ்பால் விவகாரத்துக்கும் வித்தியாசம் இல்லை: ஷீலா தீட்சித்
டெல்லி: குஜராத்தில் இளம்பெண்ணை வேவு பார்த்ததற்கும் டெஹல்கா ஆசிரியரால் பெண் பத்திரிகையாளர் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கருத்து தெரிவித்திருக்கிறார்.

குஜராத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது சாகேபுக்காக இளம் பெண் ஒருவரை வேவு பார்த்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துக் கொண்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
அதே நேரத்தில் டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலினால் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சியில் எடுத்துக் கொண்டு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. பெண் பத்திரிகையாளர் புகார் கொடுக்காத நிலையில் கோவா மாநில பாஜக அரசே வழக்கு பதிவு செய்து தருண் தேஜ்பால் மீது எப்.ஐ.ஆர். போட்டு கைது செய்யவும் முயன்று வருகிறது.
இந்நிலையில் இந்த இரு சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், இரண்டு விவகாரங்களுக்கும் அடிப்படையில் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த இரு சம்பவங்களுமே பெண்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதலே. இரண்டு வழக்குகளிலுமே சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications