கர்நாடகாவில் ரூ 36 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது: 3 பேர் கைது
கர்நாடக மாநிலத்தில் ரூ36 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடக மாநிலம் கல்புர்கியில் ரூ 25 லட்சம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்ரா துர்கா பகுதியில் நடந்த சோதனையில் ரூ11 லட்சம் என மொத்தம் ரூ 36 லட்சம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு, பலர் வங்கியாளர்களின் உதவியுடன் கருப்புப் பணத்தை மாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

நவம்பர் 30 -ம் தேதி சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றின. மேலும் பெங்களூரில் 2 பொறியாளர்கள் மற்றும் 2 ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 4.7 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பழைய ரூபாய் நோட்டுகளாக 1.3 கோடி மற்றும் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரைச் சேர்ந்த சூரஜ் சிங் என்பவரிடம் இருந்து ரூ25 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சூரஜ் சிங்கை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சித்ரா துர்கா பகுதியில் பழைய நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் பெற்றுக்கொண்டு பணம் மாற்றித் தருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அங்குள்ள தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில், 15 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் 11 லட்சம் இருந்தது. 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் 3.90 லட்சம் இருந்தது. இதுதொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications