நைட் கொஞ்சம் 'சரக்கு' போடுவது ஒன்னும் தப்பு இல்லையே..புதிய சர்ச்சையில் பீகார் முதல்வர் மஞ்சி

Subscribe to Oneindia Tamil

பாட்னா: நாள் முழுவதும் கடினமாக உழைத்துவிட்டு வருவோர் இரவில் சிறிதளவு மது குடிப்பதில் ஒன்றும் தவறு இல்லை என்று பீகார் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Nothing wrong in consuming alcohol after having dinner: Bihar CM Manjhi

கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது முதலே நாடு முழுவதும் மதுவிலக்கு பற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பீகார் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியோ மது குடிப்பதை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

பீகாரின் தனபூர் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மஞ்சி, நாள் முழுவதும் கடினமாக உழைத்து விட்டு வீடு திரும்பும் ஒருவர் இரவு உணவுக்குப் பின்னர் சிறிது மது குடிப்பதில் ஒன்றும் தவறு ஒன்றும் இல்லை என்று பேசியுள்ளார்.

ஏற்கனவே பதுக்கல்காரர்களை குற்றவாளிகளாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சிலநாட்களுக்கு முன்புதான் மஞ்சி பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+