ஐசியூ இல்லாட்டி ஆபரேஷனே பண்ணக் கூடாது.. சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாத மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பிஜய் குமார் சின்ஹா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், கொல்கத்தாவில் உள்ள ஒரு நர்சிங்ஹோமில் தனது மனைவியை அனுமதித்திருந்தேன். அங்கு அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் எனது மனைவி இறந்து போய் விட்டார். டாக்டர்களின் அலட்சியமே இதற்குக் காரணம். அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லை என்று கூறியிருந்தார்.

23 ஆண்டு கால சட்டப் போராட்டம்
இது 23 ஆண்டு கால சட்டப் போராட்டமாகும். மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு கோர்ட்டுகளில் முட்டி மோதிய பிஜய் குமார் சின்ஹா. கடைசியில் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருந்தார். விசாரணைக் காலத்திலேயே அவர் இறந்தும் போய் விட்டார். அவரது மகன் செளமிக் வழக்கை நடத்தி வந்தார்.

நீதி கிடைத்தது
இந்தப் போராட்டத்தில் தற்போது நீதி கிடைத்துள்ளது பிஜய் குமார் குடும்பத்திற்கு. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரருக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகை தர உத்தரவிட்டது.

ஐசியு இல்லாவிட்டால் ஆபரேஷனே கூடாது
ஒரு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை வசதிகள் இருந்தால் அங்கு நிச்சயம் தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆபரேஷனே செய்யக் கூடாது.

டாக்டர் மீது நடவடிக்கை இல்லை
அதேசமயம், மருத்துவர் தரப்பில் கவனக்குறைவு இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை. எனவே மருத்துவர் மீதான புகார் கைவிடப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications