ஐசியூ இல்லாட்டி ஆபரேஷனே பண்ணக் கூடாது.. சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாத மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பிஜய் குமார் சின்ஹா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், கொல்கத்தாவில் உள்ள ஒரு நர்சிங்ஹோமில் தனது மனைவியை அனுமதித்திருந்தேன். அங்கு அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் எனது மனைவி இறந்து போய் விட்டார். டாக்டர்களின் அலட்சியமே இதற்குக் காரணம். அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லை என்று கூறியிருந்தார்.

23 ஆண்டு கால சட்டப் போராட்டம்
இது 23 ஆண்டு கால சட்டப் போராட்டமாகும். மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு கோர்ட்டுகளில் முட்டி மோதிய பிஜய் குமார் சின்ஹா. கடைசியில் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருந்தார். விசாரணைக் காலத்திலேயே அவர் இறந்தும் போய் விட்டார். அவரது மகன் செளமிக் வழக்கை நடத்தி வந்தார்.

நீதி கிடைத்தது
இந்தப் போராட்டத்தில் தற்போது நீதி கிடைத்துள்ளது பிஜய் குமார் குடும்பத்திற்கு. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரருக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகை தர உத்தரவிட்டது.

ஐசியு இல்லாவிட்டால் ஆபரேஷனே கூடாது
ஒரு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை வசதிகள் இருந்தால் அங்கு நிச்சயம் தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆபரேஷனே செய்யக் கூடாது.

டாக்டர் மீது நடவடிக்கை இல்லை
அதேசமயம், மருத்துவர் தரப்பில் கவனக்குறைவு இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை. எனவே மருத்துவர் மீதான புகார் கைவிடப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய்












Click it and Unblock the Notifications