வலுவிலந்த ஓகி புயல் நாளை இரவு குஜராத்தில் கரையைக் கடக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

குஜராத்தில் ஓகி புயல் நாளை இரவு கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இது 'மொக்க' காற்றழுத்தம் பாஸ்.. வேலைக்கு ஆகாதாம்..- வீடியோ

    டெல்லி : தமிழக தென் மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய ஓகி புயல் நாளை குஜராத் கடற்பகுதியில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    குமரி அருகே வங்கக்கடலில், கடந்த 30ம் தேதி உருவான ஓகி புயல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பின் அரபிக்கடல் அருகே லட்சத்தீவை கடந்து சென்ற புயல் அங்கும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Ockhi cyclone is likely to cross Surat with low strength by Tomorrow night says IMD

    தற்போது வடமேற்கு திசையில் குறைந்த வேகத்தில் வீசி வரும் புயல் வலுவிழந்து உள்ளது. இதனை ஒட்டி நாளை புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. மேலும், வலுவிழந்த நிலையை அடையும் புயல் சூரத் அருகே நாளை இரவு கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாளை இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறுகிறது. தொடர்ந்து தெற்கு குஜராத்-வடக்கு மராட்டியம் இடையே உள்ள பகுதியில் சூரத் அருகே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. சூறைக் காற்றுடன் புயல் நெருங்குவதால் கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, வட கர்நாடக மாநில மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நாளை முதல் குஜராத், வடக்கு மகராஷ்டிரா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும். புயல் கரையை கடந்த பின்பு வடகிழக்கு திசையில் சுழன்று படிப்படியாக வலுவிழக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+