For Daily Alerts
Just In
ஒடிசா: ஹிராகுட் அணையில் படகு விபத்து- பலி எண்ணிக்கை 22ஆனது!
ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ஹிராகுட் நீர்த்தேக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த படகு திடீரென நீரில் மூழ்கியது.
படகில் இருந்த அனைவரும் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினர். மீட்புக் குழுவினரின் உதவியுடன் 80 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 10 உடல்களே மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய உடல்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். அளவுக்கு அதிகமானவர்களை படகில் ஏற்றிச் சென்றதே விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
20 people reportedly killed as boat capsizes in Odisha's Hirakud reservoir . Special Relief Commissioner PK Mohapatra said that till now 10 bodies recovered and 10 others missing.