ஒடிஷா சிட் பண்ட் மோசடி: முன்னாள் அட்வகேட் ஜெனரல் அசோக் மொகந்தி கைது
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒடிஷாவை உலுக்கி வரும் சிட் பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் அட்வகேட் ஜெனரல் அசோக் மொகந்தியை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை உலுக்கிய சாரதா சிட் பண்ட் மோசடியைப் போலவே ஒடிஷாவில் ஏடி குழும சிட் பண்ட் மோசடியும் விஸ்வரூபமெடுத்து வருகிறது. இதில் ஊடக நிறுவன அதிபர்களும் சிக்கியுள்ளனர்.
இந்த ஏடி குழுமத்திடம் இருந்து பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கடந்த 12-ந் தேதியன்று அட்வகேட் ஜெனரல் பதவியில் இருந்து அசோக் மொகந்தி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஏடி குழுமத்திடம் இருந்து ஆதாயம் அடைந்ததற்காக அசோக் மொகந்தியை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications