மமதாஜி.. உருளை சப்ளையை நிறுத்தாதீங்க..: போன்போட்டு கேட்ட நவீன்பட்நாயக்
Subscribe to Oneindia Tamil

வெங்காய விலையைத் தொடர்ந்து உருளைக் கிழங்கு விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில்தான் மேற்கு வங்கத்தில் விளைவிக்கப்படும் உருளைக் கிழங்குகளை இதர மாநிலங்களுக்கு அனுப்பமாட்டோம் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று மமதா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒடிஷா முதல்வர் நவீன்படாயக், தமது மாநிலத்துக்கான உருளைக் கிழங்கு விநியோகத்தை நிறுத்த வேண்டாம் என்றும் வழக்கம்போல சீரான விநியோகத்தை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதை ஏற்றுக் கொண்ட மமதாவும் ஒடிஷாவுக்கான உருளை விநியோகம் சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்..












Click it and Unblock the Notifications